இராணுவம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழித்தாலும் நினைவு கூருவோம் - மாவை சேனாதிராஜா

Published By: Digital Desk 3

15 May, 2021 | 05:54 PM
image

இராணுவம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழித்தாலும் நினைவு கூருவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை தனது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மே 18 நாளை போரில் உயிரிழந்த மக்கள் நினைவு நாளாக அனுசரித்து வருகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் ஒரு நினைவிடத்தை  தயார் செய்து மே மாதம் 18 ஆம் திகதி அந்த நினைவு நாளை உயிர்களை பறி கொடுத்தவர்கள் தங்களுடைய    அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொருவரிடமும் இந்த நிகழ்வு வழமைபோல் இடம்பெற்று வருகின்றது இம்முறையும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சிக்கான ஒழுங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதனை விட ஒரு நிரந்தரமான நடுகல் ஒன்றும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில்  நடுவதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்திருந்ததை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

ஆனால் கடந்த 12ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் அந்தப் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஏற்கனவே இருந்த நினைவுச்சின்னங்களின்  மேற்பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலாக பெரிய எடைகொண்ட நடுகல் ஒன்று நாட்டுவதற்காக வைக்கப்பட்டு இருந்த போதிலும் அதனை திருடி செல்லப்பட்டு விட்டது  அது  தற்போது எங்கே இருக்கின்றது என தெரியவில்லை

எனினும் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தற்போதுள்ள கொரோனா நிலைமையினை அனுசரித்து சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு மிக அவதானமாக அதனை செயற்படுத்துவதற்கு   தயாராக இருக்கிறோம்.

ஏற்கனவே போரினால் உயிர் இழந்தது போல் வடக்கில் அவ்வாறான  நிலை மீண்டும்  ஏற்பட்டுவிடகூடாது என்பதில்  மிகவும் தெளிவாக இருக்கின்றோம்.

எனவே இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வழமை போன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு நினைவு கூருவோம் அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை  நினைவு கூரஆயர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள மை தமிழ் தேச மக்களுக்கு ஒரு எழுச்சி மிக்கதாக காணப்படுகின்றது எனவே தற்போதுள்ள நிலைமை அனுசரித்து முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை நடாத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47