யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்க ஆயத்தமாகியிருந்த நிலையில் பொலிசார் மற்றும் சுகாதாரப்பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 25 க்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை குறித்த கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கான சிறப்பு பூஜை ஏற்பாடாகியிருந்தது.
தெல்லிப்பழை பொலிசார் மற்றும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிக்கு இது தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றதையடுத்து, இன்று காலை பொதுச் சுகாதரப் பரிசோதகர் மற்றும் பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.
கோவிலில் வழிபாடுகள் இடம்பெற்று அன்னதானம் வழங்கவும் ஏற்பாடாகியிருத்த நிலையில் , உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கோவில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 25 க்கும் அதிகமானோர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM