எம்.எம்.சில்வெஸ்டர்
இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களது அனைத்து வகையான கடவுச் சீட்டுகளுக்குமான வீசா அனுமதிக்காலமானது 2021 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரையான 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு, குறித்த காலப்பகுதிக்கு அமைவாக வீசா கட்டணம் மாத்திரம் அறவிடப்படுவதுடன், தண்டப்பணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.
அவசர மற்றும் அத்தியசிய தேவைகளுக்காக வெளிநாட்டு பயணச் சீட்டு வழங்குவதற்காக பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகம் திறந்திருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயண கட்டுப்பாட்டுகளுக்கு அமைவாக கண்டி, வவுனியா, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு திறந்திருக்கும் எனவும் அத்தியவசிய தேவையுடையவர்கள் மாத்திரம் வருகைதரும்படியும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சுற்றுலா வீசா வைத்திருப்பவர்கள் தங்களது வீசாவை நீட்டித்துக்கொள்வதற்கான வீசா கட்டணத்தை செலுத்துவது மற்றும் அத்தாட்சிப்படுத்துவதற்கு கீழ் காணும் நடைமுறையை பின்பற்றும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. .
இதன்படி, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான குடியுரிமை வீசா வைத்திருக்கும் சகலருக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதிக்கு முன்பாக அலுவலக நாட்களின் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 0707101050 எனும் தொலைப்பேசி இலக்கத்துக்குதொடர்பை ஏற்படுத்தி, அதன் ஊடாக தமக்கான காலத்தையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு, வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அத்தியவசிய சேவைகளுக்காக அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM