(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மிக்க நாடாக இலங்கை சிவப்பு பட்டியலுக்குள் செல்லும் நிலை எதிர்வரும் வாரங்களில் ஏற்படலாம்.
அது மாத்திரமன்றி இந்தியாவின் பிளக் பங்கஸ் வைரஸ் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல் காணப்படுவதாக அரச தாதியர் உத்தியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இவ்வாறான அச்சுறுத்தல் நிலைமையினால் நாட்டில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர்.
கட்டுநாயக விமாநிலைய குடி வரவு குடியகழ்வு பிரிவினரின் தரவுகளின் படி இவ்வாறு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேபோன்று நாட்டில் தற்பேர்து தீவிரம் கண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் விட பிளக் பங்கஸ் வைரஸ் பரவலும் இந்தியா ஊடாக இலங்கையை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய ஆளும் கட்சியால் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாது நெருக்கடிக்குள்ளாகியுள்ள போது வேறு தொற்றுக்களும் நாட்டில் தீவிரம் கண்டால் நிலைமை மோசமடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM