கைதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் இரத்து 

Published By: Digital Desk 4

13 May, 2021 | 05:09 PM
image

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் , நன்நடத்தைகளைக் கருத்திற்கொண்டு , அவர்கள் குடும்பத்தினருடன் சில தினங்கள் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்டுவரும் வரப்பிரசாதங்கள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு விளக்கமறியல் சிறையில் திடீர் சோதனை - பல மர்ம பொருட்கள் மீட்பு |  Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாக சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் நன்நடத்தைகளைக் கருத்திற் கொண்டு , அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சில தினங்கள் வாழ்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் விசேட வாய்ப்பு வழங்கப்படும்.

நீண்டகாலமாக சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள கைதிகள் , தங்களது தண்டனை காலத்தில் இருவருடகாலத்தை பூர்த்தி செய்ததும், அவர்களது நற்செயல்களை கருத்திற் கொண்டு ஆரம்பக்கட்டமாக ஒரு வாரம் அவர்களது குடும்பத்தினருடன் தங்கியிருக்க வாய்ப்பளிக்கப்படும். பின்னர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 10-14 தினங்கள் வரை குடும்பத்தினருடன் தங்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

கைதிகளின் நன்நடத்தை தொடர்பில் தரவுகள் சேகரிக்கப்பட்டு , அது தொடர்பில் விடய பொறுப்பு அமைச்சரிடம் அறிவித்து , அவருடைய அனுமதியுடனே இந்த வரப்பிரசாதம் வழங்கப்படும். 

எனினும் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அதனை செயற்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13