இலங்கையில் எவ்வாறு 20 ஆயிரம்  கொரோனா மரணங்கள் பதிவாகும்; விளக்கம் கோரி வொஷிங்டனுக்கு கடிதம்

Published By: Digital Desk 3

12 May, 2021 | 10:55 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்று மரணம் தொடர்பில் அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விடயத்தின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக எமது சங்கத்தினால் குறித்த பல்கலைக்கழகத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் நவீன் டி  சொய்சா தெரிவித்தார்.

தற்போது நிலவுகின்ற கொவிட் 19 பரவல் காரணமாக இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் கொரோனா தொற்று மரணங்களிள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என அமெரிக்காவிலுள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள மேற்படி விவகாரத்தின் நம்பகத்தன்மை குறித்தும், அது எந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டமை குறித்தும் தெளிவுபடுத்திக்கொள்ளும் நோக்கில் தமது சங்கத்தின் மத்திய செயற்குழுவின் ஊடாக வொஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தற்போது நிலவும் கொவிட் 19 தொற்றுப் பரவல் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.  பாரிய சிக்கல் நிலையில் இல்லாத கொரோனா தொற்றாளர்களை வீட்டுக்குள் வைத்து தீவிர வைத்திய கண்காணிப்பின்கீழ் சிகிச்சையளிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தோம்.

சில நிபந்தனைகளுக்கு அமைவாக கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளித்து வருவதுடன், பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தொற்றாளர்களை உடனடியாக வைத்தியாசாலைக்கு கொண்டு வருவதற்கு பதிலாக உடனடியாக மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் ஜனாதிபதிக்கும் தெரிவித்திருந்தோம்.

பி.சி.ஆர் முடிவுகளை பெற்றுக்கொண்டு சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு தொற்றுநோயியல் பிரிவினால் எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதிக்கு எமது சங்கம் தெரிவித்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18