கொவிட் மூன்றாம் அலைக்கு முகம்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த கொவிட் தொழிநுட்ப குழு அவசர கலந்துரையாடல்

Published By: Digital Desk 8

11 May, 2021 | 09:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட்டை கட்டுப்படுத்த  பயன்படுத்தப்படும் முறைமைகளை மீளாய்வு செய்வதற்கு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாட கொவிட் தொழிநுட்ப குழுவை கூட்டி பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட் மூன்றாவது அலைக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் முறைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்வது தொடர்பில்  ஆராயவும் சுகாதார அமைச்சின் கொவிட் தொழிநுட்ப குழுவுடன் அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று ஆரம்ப சுகாதார சேவை, தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தலைமையில் இடம்பெற்றுள்ளது.  சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதன்போது  கொவி்ட் மூன்றாம் அலையில் நோய் பரவும் வேகம், பீ.சீ.ஆர். பரிசோதனை, தனிமைப்படுத்தல், வைத்தியசாலைகளுக்கு அனுமதித்தல், இடம்பெறும் மரண வீதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், தற்போது தனிமைப்படுத்தும் முறைமையை மீள் பரிசீலனை செய்துள்ளதுடன் தற்போதைய அபாய நிலைமையின் அடிப்படையில் இதற்கு முன்னர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முறைமைக்கு பதிலாக, ஆரம்பத்தில் செயற்படுத்தப்பட்ட வழிகாட்டல்களை மீண்டும் செயற்படுத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று கொவிட் கட்டுப்படுத்தும் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் முறையாக கண்காணிப்பதற்கான முறையொன்றை ஏற்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அதற்காக மருத்துவ பட்டதாரிகளின் சேவையை பெற்றுக்கொள்ளவும் கலந்துரையாடப்பட்டது. அதற்கான தொலைபேசி இயக்க கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதன் தேவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் ஊடாக மக்களுக்கு அறிந்துகொள்ள  தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-05-23 13:00:45
news-image

இலங்கையில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான...

2025-05-23 12:51:21
news-image

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள்...

2025-05-23 12:38:08
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

2025-05-23 12:30:09
news-image

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்...

2025-05-23 12:39:03
news-image

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பான விசாரணைக்...

2025-05-23 12:20:55
news-image

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர்...

2025-05-23 11:36:29
news-image

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த 18 மில்லியன்...

2025-05-23 11:35:11
news-image

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர்...

2025-05-23 11:32:16
news-image

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்...

2025-05-23 11:28:22
news-image

நுவரெலியாவில் வாகனங்கள் தீவிர பரிசோதனை !

2025-05-23 11:54:35
news-image

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில்...

2025-05-23 11:40:59