இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா உயிரிழப்புக் கூட பதிவாகவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி ஆரம்ப்பமான கொரோனா வைரஸ் முதலாம் அலைக்கு பின்னர் முதல் முறையாக ஒரு நாளில் ஒரு கொரோனா உயிரிழப்பையும் பதிவு செய்யவில்லை.
இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 112,254 ஆக உள்ளது.
நேற்று திங்கட்கிழமை இங்கிலாந்தில் 2,009 புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன,
இதற்கிடையில், இங்கிலாந்தில் திங்களன்று நான்கு புதிய மரணங்கள் மாத்திரம் பதிவாகியிருந்தது.
சில வாரங்களாக இங்கிலாந்து முழுவதும் நாளாந்த இறப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன,
வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நகரங்களில் ஏப்ரல் பிற்பகுதியில் பல நாட்களாக இறப்புகளை பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், மே 17 ஆம் திகதி அன்று திட்டமிட்டபடி இங்கிலாந்தின் ஊரடங்கு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இதன் பொருள் மக்கள் ஆறு அல்லது இரண்டு வீடுகளில் குழுக்களாக வீட்டிற்குள் சந்திக்க முடியும், அதே நேரத்தில் பப்கள் மற்றும் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியும்.
அடுத்த திங்கட்கிழமை முதல் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையில் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படுமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தின் வயது வந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்போது கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர், மொத்தம் 17,669,379 பேர் இரண்டு கட்டங்களையும் பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM