மாணவியை கர்ப்பமாக்கிய பாடசாலை ஊழியர் கைது - பதுளையில் சம்பவம்

Published By: Digital Desk 4

09 May, 2021 | 07:24 PM
image

பதுளை பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையொன்றில் ஊழியராக இருந்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மடுல்சீமைப் பொலிசாரினால் இன்று 09-05-2021 கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதுடைய மாணவியொருவரை, பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே, மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து குறித்த இளைஞனை நாளை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்றிருந்த, குறித்த மாணவி பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட போது, அவர் நான்கு மாத கர்ப்பிணியென்று தெரியவந்துள்ளது. 

அதைத் தொடர்ந்து மகளிர் பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த மாணவி வழங்கிய தகவலின் பேரில், பொலிசார் அந்த இளைஞன் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34