கபில்
“ஜனாதிபதியும் பிரதமரும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போவதாக அளித்துள்ள வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைக்க முடியாத நிலையே இன்றுள்ளது”
“ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பின்மை மாத்திரமன்றி, அவர்களின் மீதான உரிமைகள் மீறப்படுகின்ற போது, நீதி நிலை நாட்டப்படுவதில்லை என்ற அவலம் தொடருகின்றது”
கடந்த வாரம் சர்வதேச ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்திருந்த செய்தியில், உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல, உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து, போலிச் செய்திகளின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற வெறுப்பை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை.
அரசாங்கத்துக்கு ஊடகங்கள் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அது தாங்கியிருந்தது. அத்துடன் “நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி, நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாகவும் ஊடகங்களே திகழ வேண்டும்” என்றும் ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, அரசாங்கத்தின் நிறைகளை ஊடகங்கள் குறிப்பிடாமல், குறைகளை மட்டுமே பேசுகின்றன என்ற குற்றச்சாட்டையும், மக்களை நல்வழிப்படுத்த அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியின் செய்தி உள்ளடக்கியிருந்தது.
ஊடக சுதந்திரத்தை தமது அரசாங்கம் பாதுகாக்கும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்திருந்தாலும், இலங்கையில் ஊடக சுதந்திரம் படிப்படியாக கேள்விக்குள்ளாகி வருகிறது என்பதே உண்மை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-09#page-5
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM