ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பழைய நகரான டமாஸ்கஸ் கேட்டில் எதிர்ப்பாளர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசினர், அதிகாரிகள் கையெறி குண்டுகள், இறப்பர் தோட்டாக்கள் மற்றும் நீர் பீரங்கி மூலம் பதிலளித்துள்ளனர்.
யூதக் குடியேற்றவாசிகளால் உரிமை கோரப்பட்ட நிலத்திலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான அமைதியின்மையாக இது தொடர்கிறது.
அல்-அக்ஸா மசூதி அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் குறைந்தது 17 இஸ்ரேலிய பொலிஸார் காயமடைந்ததாக அவசரகால தொழிலாளர்கள் மற்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி வளாகம் இஸ்லாத்தின் மிகவும் மதிக்கப்படும் தளங்களில் ஒன்றாகும், இந்த வளாகம் வன்முறைகளால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
முஸ்லிம்களின் புனித ரமலான் மாதம் முழுவதும் நகரத்திலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும், காசாவிலும் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM