டோக்கியோ ஒலிம்பிக் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் ஜோன் கோட்ஸ் சனிக்கிழமை உறுதியாக கூறினார்.
ஜூலை மாதத்தில் தொடங்கவிருக்கும் விளையாட்டுக்கள் இந்த இக்கட்டான நிலையில் இரத்து செய்யப்படுமா அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என்று ஏ.எப்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள நாங்கள் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும் ஜோன் கோட்ஸ் கூறினார்.
டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்று வரும் தொற்றுநோய் மற்றும் அவசரகால வைரஸ் நிலை காரணமாக, விளையாட்டுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.
டோக்கியோ விளையாட்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒருங்கிணைப்பு ஆணையத்தின் தலைவரான கோட்ஸ், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஜப்பானிய பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு பெரிய அளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM