குழந்­தை­களின் உடல் வளர்ச்சியை தூக்கமே நிர்ணயிக்கின்றது

Published By: Robert

22 Aug, 2016 | 09:45 AM
image

''குழந்­தைகள் பசி, மலம் , சிறுநீர் பிரிதல் ஆகி­யவை ஏற்­பட்டால் தான் தூக்­கத்­தி­லி­ருந்து அழு­து­கொண்டு எழு­கி­றது. இவர்­க­ளுக்கு உணவோ அல்­லது அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட அசௌ­க­ரி­யத்தை நீக்­கி­விட்டு சுத்­தப்­ப­டுத்­தி­விட்­டாலோ மீண்டும் உறங்­கு­வார்கள். அத்­துடன் குழந்தை பிறந்து நான்கு மாதம் வரை அந்த குழந்­தைக்கு பகல் இரவு என்ற வேறு­பாடு தெரி­யாது. இந்த நேரத்தில் இயற்­கையின் உந்­து­த­லுக்கு ஏற்­பவே உறங்­கு­கி­றார்கள். ஆனால் நான்கு மாத முடிவில் அக்­கு­ழந்தை, பகலில் அதி­க­மா­ன­வர்கள் நட­மா­டு­கி­றார்கள். ஒலி அதி­க­மாக இருக்­கி­றது. ஒளியும் இருக்­கி­றது. ஆனால் இரவு நேரத்தில் அதி­க­மா­ன­வர்கள் நட­மா­ட­வில்லை. சத்­தமும் இல்லை. யாரும் சுறு­சு­றுப்­பாக இயங்­க­வில்லை, ஒளியும் குறை­வா­கவே இருக்­கி­றது. என்­பதை உட்­கிரகித்துக் கொள்­கி­றது. இதன் பின் தான் பகல் இரவு என்ற வேறு­பாட்­டை ­உ­ணர்ந்­துகொள்கிறது"என்று எம்­முடன் இயல்­பாக பேசத் தொடங்­கு­கிறார் சென்­னையில் பிர­ப­ல­மான குழந்­தைகள் நல மருத்­து­வரும், குழந்­தைகள் உள­வியல் நிபு­ண­ரு­மான டொக்டர் யமுனா. அவரை அவ­ரது மருத்­து­வ­ம­னையில் சந்­தித்து உரை­யா­டினோம்.

* குழந்­தை­களின் உறக்­கத்தை வைத்து அவர்­களின் நடத்­தையையும் குணத்­தையும் கண்­ட­றிந்து அதனை அவர்­களின் வளர்ச்­சிக்­கு­ரிய நேர்­ம­றை­யாக மாற்ற முடி­யுமா..! என்­பது குறித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்­வினைப் பற்றி சொல்லுங்களேன்?

பொது­வாக ஒவ்­வொ­ரு­வரும் தங்­களின் வாழ்­நாளில் மூன்றில் ஒரு பங்கு கால கட்டம் தூக்­கத்­திற்­காக செல­வி­டு­கிறோம். இப்­ப­டி­யி­ருக்கும் தரு­ணத்தில் தூக்கம் ஏன் வரு­கி­றது? எதனால் வரு­கி­றது? இதன் உபயோகம் என்ன? தூக்­கத்­திற்கு பின் நாம் எவ்வளவு தூரம் புத்­து­ணர்ச்­சி­ய­டை­கிறோம்? இதன் கார­ண­மாக எம்­மு­டைய மூளை எவ்­வ­ளவு தூரம் சுறு­சுறுப் படைந்து விரி வடை­கி­றது? என்­பதை பற்­றி­யெல்லாம் யோசிக்கும் போது தான் தூக்­கத்தின் முக்­கி­யத்­துவம் புரியும்.

எம்மில் பல­ருக்கும் பல­வித எண்­ணங்கள் ஓடிக்­கொண்­டி­ருக்கும் போது திடி­ரென்று ஒரு நொடியில் தூக்கம் எம்மை ஆக்­கி­ர­மித்­து­விடும். இது எப்­படி வரு­கி­றது என்று யாருக்கும் தெரி­யாது. தூக்கம் எம்மை தழுவ ஆரம்­பித்­த­வுடன் எண் ணங்­களின் பிடி­யி­லி­ருந்து மெல்ல மெல்ல நழுவி உறக்க நிலைக்குச் செல்­கிறோம். இதே தரு­ணத்தில் குழந்­தை­க­ளுக்கு என்று வரும் போது அவர்­க­ளுக்கு தூக்கம் என்­பது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்­கி­றது. ஏனெனில் அண்­மைய ஆய்வு களின் படி ஒவ்­வொரு குழந்­தையின் உடல் வளர்ச்­சியும் உறக்­கத்தின் போது தான் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது. ஒவ்­வொரு குழந்­தையின் வளர்ச்­சிக்கும் மூல காரணம் மூளை­யி­லுள்ள பிட்­யூட்­டரி சுரப்­பி­களின் செயற்­பா­டுகள். இவை ஆழ்­நிலை உறக்­கத்தின் போது தான் செயற்­படத் தொடங்­கு­கி­றது.

ஒவ்­வொ­ரு­வரும் எட்டு மணித் தியாலம் வரை உறங்­க­வேண்டும் என்று பரிந்­து­ரைத்­தி­ருக்­கி­றார்கள். இந்த எட்டு மணித்­தி­யால உறக்­கத்தின் போது எத்­தனை 90 நிமிட தூக்க சுழற்சி வரும் என்­பதை கணக்­கிட்டு, அதி­லி­ருந்து அதனை எப்­படி எதிர்­கொள்­கிறோம் என்­பதைப் பொறுத்து ஒரு­வரின் உடல் வளர்ச்­சியும் ஆரோக்­கி­யமும் கணக்­கி­டப்­ப­டு­கின்­றன. பொது­வாக ஒவ்­வொ­ரு­வரும் தினந்­தோறும் ஐந்து தூக்க சுழற்சி வரை உறங்­க­வேண்டும் என்ற கணக்­கீடு கூறு­கி­றது. அதே போல் பெரும்பாலா­ன­வர்­களின் விழிப்பு நிலை என்­பது கனவு வந்­தபின் தான் நிகழும் என்­பதை அனு­ப­வத்தில் காணலாம். ஒரு சில­ருக்கு கனவு வந்­தபின் உறக்கம் கலையும். அந்த கனவை திரும்ப மீட்­டெ­டுக்க இய­லாது. இப்­படி மீட்­டெ­டுக்க இயலா நிலை­யி­லுள்ள கனவை கண்டு எழுந்­தி­ருப்­பது தான் ஆரோக்கிய­மான உறக்கம் என்று அழைக்­கிறோம். அதே சம­யத்தில் இந்த தூக்க சுழற்சி என்­பது வளர்ந்த ஆண் மற்றும் பெண்­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தக்­கூ­டி­யது. குழந்­தை­க­ளுக்கு பொருந்­தாது. ஏனெனில் குழந்­தை­களின் பசியைப் பொறுத்தே அவர்­களின் தூக்க சுழற்சி அமையும். அவர்­களின் தூக்க சுழற்சி அதி­க­பட்சம் 45 நிமி­டங்கள் வரையே நீடிக்கும். அதன் பின் அவர்கள் தாங்கள் ஆழ் நிலை உறக்­கத்­திற்கு சென்­றி­ருக்­கி­றார்கள் என்றால் ஏதேனும் சிறிய அளவில் ஒலியை எழுப்­பு­வதோ அல்­லது சிரிப்­பதோ அல்­லது கைகால்­களை அசைப்­பதோ நடை­பெறும். இதனை வைத்து அவர்கள் ஆழ்­நிலை உறக் கத்­திற்கு சென்­றி­ருக்­கி­றார்கள் என்­பதை உண­ரலாம்.

உல­கத்­தி­லேயே இந்­தியா, இலங்கை, சீனா உள்­ளிட்ட ஆசிய நாட்டு குழந்­தைகள் தான் குறைந்த அளவில் உறங்­கு­கி­றார்கள். நியூ­ஸி­லாந்து மற்றும் அவுஸ்­தி­ரே­லியா நாட்டு குழந்­தைகள் தான் அதி­க­ளவில் உறங்­கு­கி­றார்கள் என்று ஓர் ஆய்வில் கண்ட றியப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்கு அவர்கள் குழந்­தை­களை இளம்­பி­ரா­யத்­தி­லேயே தனி யாக படுக்­கை­ய­றையை ஒதுக்கி அதில் தூங்­க­வேண்டும் என்று பயிற்சி அளித்து பழக்­கப்­ப­டுத்­து­வது தான் காரணம் என்றும் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் இந்த நிலை தெற்­கா­சி­யாவில் இல்லை என்­பது தான் நடை­முறை யதார்த்தம். ஆரோக்­கி­ய­மாக தூங்­கி­யெழும் குழந்­தையின் நட­வ­டிக்கை நன்­றாக இருக்கும். கல்வி கேள்­வியில் முன்­னேற்றம் இருக்கும். சுறு­சு­றுப்­பாக இயங்­கு­வார்கள். நோயெ­திர்ப்பு கூடு­த­லாக இருக்கும். பழகும் பண்பும் இனி­மை­யாக இருக்கும். அந்த தோற்­றப்­பொ­லிவே நன்­றாக இருக்கும்.

* குழந்­தை­களை பய­மு­றுத்­து­வது அவர்­க­ளுக்குள் எம்­மா­தி­ரி­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்?

பய­மு­றுத்தும் போது அவர்­க­ளுக்கு இந்த உல­கத்தின் மீது நம்­பிக்கை வராது. இதனை தொடர்ந்து செய்யும் போது, அது நடை பெற­வில்லை என்றால் பய­மு­றுத்­த­லுக்­கான மதிப்­பீடு குறைந்து விடும். அதா­வது ஒரு குழந்­தையை சாப் பிட­வில்லை என்றால் அடித்து விடுவேன் என்று தொடர்ச்­சி­யாக சொல்லிக் கொண்டு இருப்­பது. ஆனால் ஒரு கட்­டத்தில் நீங்கள் அடிக்­காமல் இருந்தால். அடிப்பேன் என்று பய­முறுத்துவது வீணா­கி­விடும். அதே போல் பயமுறுத்­து­வதைக் காட்­டிலும் அன்பு நெறி சார்ந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் போது தான் குழந்­தைகள் அறி­வார்த்­த­மாக வளர்­வார்கள்.

* ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற கருத்­துரு தான் இந்த சமூ­கத்தை பாதிக்­கி­றது என்­கி­றார்­களே உண்­மையா?

பெரிய அளவில் சிந்­திக்­க­வேண்டும் என்றால் இது மக்கள் தொகை கட்டுப்பாட்­டிற்கு உதவும். ஆனால் நாள­டைவில் உற்றார் உற­வினர் என்­ப­வர்கள் குறைந்­து­வி­டு­கி­றார்கள். இதனால் குழந்­தை­களோ அல்­லது வள­ரிளம் பரு­வத்­தி­னரோ தங்­களின் பேச்­சுத்­து­ணைக்கும், தங்­களின் எண்ணப் பகிர்­த­லுக்கும் சம வய­து­டை­ய­வர்கள் கிடைப்­பதில் சிரமம் ஏற்­படும். ஆனால் பெற்­றோர்கள் அவர்­களின் எதிர்பார்ப்­பிற்கு ஏற்ப தோழர்­க­ளையோ தோழி­க­ளையோ உரு­வாக்கி கொடுத்தால் எந்த பிரச்­ச­ினையும் எழு­வ­தில்லை. இத­னை­வி­டுத்து தானும் தன்­னு­டைய குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் சமூ­கத்தில் இருக்கும் யாரு­டனும் பழ­க­வி­டாமல் தனியாக வளர்த்­தெ­டுக்கும் போது பிரச்­சினை ஏற்படும்.

* சிங்கிள் பேரண்ட் குழந்­தை­களின் ஆரோக்­கியம் குறித்து..?

பயப்­ப­ட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஏனெனில் கூட்­டுக்­கு­டும்­ப­மா­கவோ அல்­லது கணவன் மனைவி சேர்ந்து இருந்­தாலோ குழந்­தையை கவ­னிப்­பது ஒருவர் தான். கதை சொல்­வ­தாக இருந்­தாலும் சரி, வழி நடத்­து­வ­தாக இருந்­தாலும் சரி அன்பு சார்ந்த நெறி­மு­றையை பின்­பற்­றினால் போதும் என்­பதே எம்­மு­டைய பரிந்­துரை

* தாய் தந்தை என இரு­வரும் இரண்டு வித தாய்­மொ­ழி­க­ளாக இருந்தால் பிறக்கும் குழந்­தைக்கு மொழி­ய­றிவு வளர்ச்சி அடை­வதில் குழப்பம் இருப்பதாக கூறு­கி­றார்­களே உண்­மையா?

குழப்பம் இருக்­காது. ஆனால் தாமதம் ஏற்­படும். குழந்தை இரண்டு மொழி­க­ளையும் உள்­வாங்கிக் கொண்டு பேசு­வ­தற்கும் எதிர்­வி­னை­யாற்­று­வ­தற்கும் சற்று தாம­தப்­ப­ட­லாமே தவிர குழப்பம் ஏற்­ப­டாது. அப்பா தமி­ழா­கவும் அம்மா வேறு மொழி­யா­கவும் இருக்கும் பட்­சத்தில் இரண்டு பேரும் இரண்டு மொழியில் கொஞ்சினாலும், அந்த குழந்தை இரண்­டையும் புரிந்து கொண்டு எதில் பதி­ல­ளிக்­க­வேண்டும் என்­பதை கண்­கா­ணித்து அதன் பிறகே பேசத் தொடங்கும். அம்­மா­விடம் அம்­மாவின் மொழி­யையும், அப்­பா­விடம் பேசும் போது அப்­பாவின் மொழி­யையும் பேசும். சில குழந்­தைகள் குறிப்­பிட்ட காலம் வரை சைகையில் பேசக்­கூடும். ஆனால் காலம் செல்ல செல்ல குழந்­தை­யா­னது இரண்டு மொழி­க­ளையும் கற்­றுக்­கொள்ளும் திறன் பெற்­று­விடும்.

* நியோ­நாட்டல் இன்­டென்சிவ் கேர் குழந்­தை­களின் ஆரோக்­கி­யத்­திற்கு எந்த வகையில் உத­வு­கி­றது?

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தை களுக்கும், பிறக்கும் போதே ஏரா­ள­மான மருத்­துவ சவால்­க­ளுடன் பிறக்கும் குழந்தைக­ளுக்கும் இது பெரு­ம­ளவில் உதவி செய்­கி­றது. இதன் போது குழந்­தை­களின் வெப்ப நிலை, ஓக்ஸிஜன் அளவு, மூச்சு விடுதல், இதயத் துடிப்பு கண்காணித்தல் மற்றும் அவர்களுடைய உடலிலுள்ள நீரின் அளவு எந்த விகிதத்தில் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை பராமரிப்பது, இது போன்ற செயற்பாடுகளை நியோநாட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட் செய்கிறது. இதன் பிறகு அந்த குழந்தை தாய்பால் அருந்துதற்கு தயாரானவுடன் தாய்ப் பாலை புகட்டுகிறார்கள்.

அதே போல் சில குழந்தைகளுக்கு மூச்சு விடுதலில் சிரமம் இருந்தால் அந்த குழந்தைக்கு வென்டிலேட்டர் கேர் கொடுப்பார்கள். இவர்கள் முதல் மூன்று நாள்கள் தப்பி பிழைத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியம் குறித்து பயப்படத்தேவையில்லை நன்றாக வேயிருக்கும்.

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி dryamunapead@yahoo.com

சந்திப்பு: புகழ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29