எரிவாயு சிலிண்டரில் எரிவாயுவின் அளவைக் குறைத்து விலையை அதிகரித்து பாரிய மோசடி - கபிர் ஹாசிம்

Published By: Digital Desk 2

07 May, 2021 | 12:24 PM
image

 எம்.மனோசித்ரா

கொவிட் தொற்றின் காரணமாக நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் எரிவாயு சிலிண்டரில் காணப்படுகின்ற எரிவாயுவின் அளவைக் குறைத்து , அதன் விலையை அதிகரித்து பாரிய மோசடி இடம்பெறுகிறது. இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் 18 லீற்றர் எனக் குறிப்பிட்டு , அந்த சிலிண்டரில் எரிவாயுவின் அளவை 9 கிலோ கிராமாகக் குறைத்து கூடிய விலையில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் 121 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோ எரிவாயுவின் விலை தற்போது 155 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றி அரசாங்கம் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

விலை தொடர்பில் நிர்ணயிக்கக் கூடிய அதிகாரம் உடை நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளரும் இதன் மூலம் பாரிய மோசடி இடம் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாகக் குறிப்பிட்டு , அதன் விலையை நுகர்வோர் அதிகாரசபையின் அனுமதி நிச்சயம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த நடைமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.

விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதற்கு துணைபோயுள்ளாரா? இந்த எரிவாயு சிலிண்டரில் கலப்புக்கள் மாற்றமடைந்துள்ளதால் இதன் விலை மாற்றமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் நுகர்வோர் அதிகாரசபை அதனை மறுத்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே இந்த மோசடி இடம்பெற்றுள்ளமை தெளிவாகிறது. எனவே இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ள சகல அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04