மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கடினம் - ரொஷான் ரணசிங்க

Published By: Digital Desk 3

03 May, 2021 | 12:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து  இம்மாத காலத்திற்குள் உறுதியான தீர்வை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்  மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கடினமாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை எதிர்க் கொள்வது தற்போதைய சூழ்நிலையில் சவால்மிக்கதாக காணப்படுகிறது என  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க  அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தல் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர்  அமைச்சரையில் சமர்ப்பித்துள்ள யோசனை குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படாத நிலை காணப்படுகிறது. யோசனையின் ஒரு சில உள்ளடக்கங்களுக்கு  அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பல்வேறுப்பட்ட சிக்கல் நிலை காணப்படுகிறது.  மாகாண சபை தேர்தல் முறைமையை அவற்றில் பிரதானமானவையாக குறிப்பிட  வேண்டும். தேர்தல் முறைமை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகளும்  கோரப்பட்டன. அந்த யோசனைகள்  ஒவ்வொன்றும் முரண்பட்டதாக காணப்படுகிறது. ஆகவே மாகாண சபைதேர்தல் முறைமை  தொடர்பில் இம்மாத காலத்திற்குள் ஒரு உறுதியான தீர்வை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவதற்கான  சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது.  கடந்த காலங்களை காட்டிலும்  கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது  சடுதியாக அதிகரித்துள்ளது. இச்சவாலை  எதிர்க் கொள்ள அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சுகாதார தரப்பினரது  அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை எதிர் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள  வேண்டும். எதிர் தரப்பின் ஒரு சில செயற்பாடுகள் வெறுக்கத்தக்கதாக உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17