சி . சிவகுமாரன்
தொழிலாளர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, அவர்களின் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பில் கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் மே தினத்தின் எதிர்காலம் தொடர்பில் இப்போது கவலை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து பல சர்வதேச நிகழ்வுகள் தேக்கமடைந்திருப்பது என்னவோ உண்மை. எனினும் அனைத்திலும் தனித்துவமிக்கதாக விளங்கி வரும் ஒரு சில நிகழ்வுகளில் உழைப்பாளர் தினம் முக்கியத்துவம் பெற்றமைக்குக் காரணம் அது உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் பொதுவான நாளாக அமைந்தமையாகும்.
எனினும் கடந்த ஓரிரு தசாப்தங்களாக இந்த உழைப்பாளர் தினமானது அதன் தாற்பரியத்தை விளங்கி குறித்தக சமூகங்களால் கொண்டாடப்படுகின்றதா என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. மிக பிரதானமாக இலங்கையைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மே தின நிகழ்வுகள் ஊர்வலங்கள் அனைத்துமே , நூற்றுக்கு நூறு வீதம் முழுமையான அரசியல் நிகழ்வாகவே விளங்கி வந்துள்ளன.
கட்சி நிகழ்வுகளுக்கு கூட்டங்களை திரட்டுவது போன்றே மே தினத்துக்கு மக்கள் திரட்டப்பட்டனர். கட்சித் தலைவர்களின் படங்களும், பதாதைகளும் கட்சி கொடிகளின் ஆக்கிரமிப்புக்களையே இங்கு அதிகம் காணலாம். நாட்டில் ஆட்சியதிகாரத்திலுள்ள கட்சிகள் மற்றும் பங்காளி கட்சிகள் இவ்வாறு பிரமாண்டமான முறையில் மே தினத்தை கட்சி நிகழ்வுகளாகவே முன்னெடுத்து வந்துள்ளன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2021-05-02#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM