போலி இலக்க தகடு, ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் கைது

Published By: Vishnu

02 May, 2021 | 12:43 PM
image

(செ.தேன்மொழி)

கல்முனை - மருதமுனை பகுதியில் போலி வாகன இலக்க தகடுகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போலி இலக்கத்தகடுகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது விசேட அதிரடிப்படையினரால் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று நிறுத்தி சோதனைக்குட்படுத்தப்பட்ட போது , அதிலிருந்து போலி இலக்கத்தகடுகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக இந்த இலக்கதகடுகளை வைத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதே வேளை கார் ஒன்றும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து , 3 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதோடு , காரில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாளிகாவத்தை , தெஹிவலை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02