இஸ்ரேலில் பாரிய அனர்த்தம் : 44 பேர் பலி

Published By: Digital Desk 3

30 Apr, 2021 | 11:00 AM
image

இஸ்ரேல் நாட்டின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது.  இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 44 பேர் சிக்கி பலியானார்கள், 103 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ்கள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.  

மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் வைத்தியசாலை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர்.  

இந்த சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கூட்ட நெரிசலுக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவரவில்லை.  இதுபற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52