கொவிட்-19 பரவல் காரணமாக நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் இந்தியாவுடன் கூட்டொருமைப்பாட்டுடன் செயற்படும் இலங்கை தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு இட்டுச் செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வியாழக்கிழமை முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொவிட்19 தொற்று பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இக்காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுடன் செயற்படும் இலங்கை தலைமைத்துவத்துக்கு தெரிவிப்பதாகவும் , சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு இட்டுச் செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் கோருவதாகவும் உயர் ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM