பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் - வடிவேல் சுரேஷ்

24 Apr, 2021 | 02:55 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படுகிறது என்பதற்காக வழமையை மாற்றி மேலதிக கொடுப்பனவை வழங்காமல் இருக்க முடியாது. 

கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தொழிலுக்குச் செல்கின்றனர்.

எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். 

அச்சத்தின் மத்தியிலேயே அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதே போன்று பாடசாலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்.

மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். 

கொவிட் கட்டுப்படுத்தலுக்காக பெருந்தோட்டங்களில் எந்தவொரு முறையான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்றத்திற்குள் நுழையும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்...

2025-03-17 20:36:16
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையால் அமைதியற்ற நிலைமை...

2025-03-17 16:59:50
news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43