(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நீதிமன்ற அதிகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றுக்கு வழங்குவது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
அதனால் அரசாங்கம் விசேட ஆணைக்குழு அமைத்து ஹரீன் பெர்ணான்டோவை அரசியல் வேட்டையாடயாட முற்பட்டால் நாங்கள் சர்வதேசத்தில் முறையிடவும் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற 2015 முதல் 2019 நவம்பர் மாதம் 19ஆம் திகதிவரையான காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் தொடர்பில் ஆராய விசாரணை குழு அமைத்து, அதன் பரிந்துரைகளை குற்றப்புலனாய்வு துறைக்கு வழங்கி இருந்ததோம்.
குற்றப்புலனாய்வு துறை அதுதொடர்பில் விசாரணை செய்து அதன் அறிக்கையை சட்டமா அதிபருக்கு வழங்கி இருந்தது. சட்டமா அதிபர் திணைக்களமே குற்றம் உள்ளவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. அதனால் நாங்கள் காட்டுச்சட்டத்தை பின்பற்றி செயற்டபவில்லை. தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு சாட்சியம் இலலை என்றால் அவருக்கு அதிலிருந்து விடுதலையாகலாம்.
அப்படி இருக்கும் நிலையில் நீதிமன்றத்துக்கு சென்று தங்களின் குற்றமற்ற தன்மையை ஒப்புவிக்க ஏன் அச்சப்படுகின்றீர்கள். அத்துடன் அரசாங்கத்தின் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நாட்டின் சுயாதீன் நீதித்துறைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
அதனால்தான்தான் இதற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல அமைப்புகள் நீதிமன்றம் சென்றிருக்கின்றது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது மக்களின் இறையாண்மைக்கு எதிராகும்.
மேலும் எமது நாடு தொடர்பில் மனித உரிமை பேரவையால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.
நீதிமன்றத்துக்கு அப்பால் ஆணைக்குழுவொன்று தீர்ப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்வது நாட்டின் சுயாதீன் நீதித்துறைக்கு பாரிய அச்சறுத்தலாகும். அதனால் அரசாங்கம் விசேட ஆணைக்குழு அமைத்து ஹரீன் பெர்ணான்டோ உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசியல் வேட்டையாட முற்பட்டால். அதற்கு எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் சர்வதேசத்துக்கு செல்லவும் தயார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM