நுண்கடனால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்  - சஜித் கோரிக்கை

Published By: Digital Desk 4

20 Apr, 2021 | 09:35 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணம் என்ன ? அத்துடன் வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த அரசாங்கம் மேற்கொண்டுவந்த திட்டத்தை அரசாங்கம் இல்லாமல் செய்திருக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கேள்வி நேரத்தில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கிலே நுண்கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

பெரும்பாலான நாடுகளில் இந்த திட்டம் மிகவும் வெற்றிகராமாக இடம்பெற்று வருகின்றது. எமது நாட்டிலும் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. அரச அங்கிகாரத்துடன் அந்த நிறுவனங்கள் செயற்படவேண்டும் என்பதே அதன் நிபந்தனையாகும்.

என்றாலும் நாட்டில் பல நுண்கடன் நிறுவனங்கள் செயற்படுகின்றபோதும் அதுதொடர்பாக முறையாக கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றாமல் இருப்பதால், அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் நினைத்த பிரகாரம் செயற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

நுண்கடன் நிறுவனங்களுக்கு 35வீத வட்டியே அறவிடமுடியும் என அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளபோதும் சில நிறுவனங்கள் 100வீதம் தொடர்க்கம் 220வீதம் வரை வட்டி அறவிடுகின்றன.

இதனால் கிராமங்கள் உட்பட நகர மக்களும் பாரியளவில் பாதிக்கப்படுள்ளனர். நுண்கடன் நிறுவனங்களால் கடன் பெற்றுக்கொண்டுள்ள மக்கள் அதனை செலுத்த முடியாமல் அசெளகரிய நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றனர்.

அதிகமானவர்கள் கடன் செலுத்த முடியாமல் தங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக இந்த கடன் தொல்லையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெண்களாகும்.

இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்கள் அதனை திருப்பி செலுத்த முடியாமல் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

மேலும் கடந்த காலங்களிலும் நுண்கடன் திட்டத்தினால் வடக்கில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தபோது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால் அந்த நிவாரண திட்டத்தை அரசாங்கம் இல்லாமலாக்கி இருக்கின்றது.எனவே நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அந்த சுமையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38