வீதி விபத்துக்கள் காரணமாக 7 நாட்களில் 69 பேர் பலி

Published By: Vishnu

20 Apr, 2021 | 09:40 AM
image

நாடு முழுவதும் 7 நாட்களில் பதிவான வீதி விபத்துக்கள் காரணமாக 69 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 13 காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணிவரையான காலப் பகுதியில் பதிவான விபத்துக்கள் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக வீதி விபத்துக்கள் காரணமாக அன்றாடம் 6 அல்லது 7 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ள நிலையில் தற்சமயம் அந்த எண்ணிக்கை 9 முதல் 10 ஆக உயர்வடைந்துள்ளது.

இது இவ்வாறு தொடருமானார் ஆண்டொன்றுக்கு 3,650 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனவே வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் 4 ஆம் திகதி மாத்திரம் வீதி விபத்துக்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 3,556 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17