நமது அரசியல் நிருபர்
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் ஆளுங்கட்சியில் பங்காளிக்
கட்சிகளாக அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்ச்சியாக வலுவடைந்து கொண்டே செல்கின்றன.
இரண்டு தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு அரசியல் நகர்வுகளிலும் காய் நகர்த்தல்களிலும் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது.
ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கு பாதகம் ஏற்படும் வகையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ அரசியல் காய் நகர்த்தலை மேற்கொண்டு வருவதாக பங்காளிக் கட்சிகள் கடும் குற்றச்சாட்டை
முன்வைத்துள்ளன. தற்போது பஷில் ராஜபக்ஷவின் கைகளுக்கு சென்றிருப்பது மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலமாகும் என்று கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன.
மிக முக்கியமாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்காரவின் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பை இந்த தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு வெளியிட்டுள்ளன.
குறிப்பாக ஒரு தொகுதியில் மூவர் போட்டியிடும் வகையில் இந்த தேர்தல் திருத்தச் சட்டமூலம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு இருக்கின்றன. ஒரு தொகுதியில் மூவர் போட்டியிடும் பட்சத்தில் அதில் பிரதானமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு அதிக அளவிலான வாக்குகள் கிடைக்கும் என்றும் ஏனைய சிறிய கட்சிகளின் வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்றும் சிறிய கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
அதன் அடிப்படையில் தேர்தல் சட்ட மூலத்துக்கு கடுமையான எதிர்ப்பை பங்காளிக் கட்சிகள் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் சிறிய கட்சிகளின் மற்றும் பங்காளி கட்சிகளின் எதிர்ப்பை மீறி மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம்
பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் அதனை முழுமையாக தோற்கடிப்பதற்கு முயற்சிப்பது குறித்து பங்காளிக் கட்சிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமயவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. இதன்போது இந்தத் தேர்தல் திருத்தச் சட்டத்தை முற்றாக எதிர்ப்பது என்று அந்த கட்சிகள் தீர்மானித்திருந்தன.
அதுமட்டுமின்றி பங்காளிக் கட்சிகளின் தீர்மானத்தை மீறி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் அதையும் மீறி பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் நிறைவேறும் பட்சத்தில் எதிர்வரும் மாகாணசபை
தேர்தலில் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிடுவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-18#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM