(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுக நகர பொருளதார ஆணைக்குழுவினால் நாட்டின் இறையாண்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய பொருளாதாரத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் விவகாரம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
தவறான விடயங்களை முன்னிலைப்படுத்தி அதனுடாக அரசியல் இலாபம் தேடிக்கொள்ள ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்களும், எதிர்க்கட்சியினரும் முயற்சிக்கிறார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளார்கள்.
30 வருட கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்திய தன் கௌரவத்தை நாட்டு மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்றும் வழங்குகிறார்கள்.
கொழும்பு துறைமுக நகரம் சீன காலணித்துவ ஆட்சிக்குள் கொண்டுவரப்படுவதாக குறிப்பிடப்படும் கருத்து தவறானதாகும்.
ராஜபக்ஷாக்கள் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. சர்வதேசத்திடமிருந்து நாட்டை பல முறை பாதுகாத்துள்ளார்கள். நெருக்கடியான சூழ்நிலையிலும் நாட்டின் சுயாதீனத்தன்மை விட்டுக் கொடுக்கப்படவில்லை.
துறைமுக நகரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கும். இவ்விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை முன்னனெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போலியான செய்திகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM