கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவினால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாது - நிமல் லன்சா

18 Apr, 2021 | 07:38 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகர பொருளதார ஆணைக்குழுவினால் நாட்டின் இறையாண்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய பொருளாதாரத்தை  துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுக  நகர பொருளாதார ஆணைக்குழு  சட்டமூலம் விவகாரம் தற்போதைய  பிரதான  பேசுபொருளாக காணப்படுகிறது. 

தவறான விடயங்களை  முன்னிலைப்படுத்தி அதனுடாக அரசியல் இலாபம் தேடிக்கொள்ள ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்களும், எதிர்க்கட்சியினரும் முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளார்கள். 

30 வருட கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த  தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்திய தன் கௌரவத்தை நாட்டு மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்றும் வழங்குகிறார்கள்.

கொழும்பு துறைமுக நகரம்  சீன காலணித்துவ ஆட்சிக்குள் கொண்டுவரப்படுவதாக  குறிப்பிடப்படும் கருத்து தவறானதாகும். 

ராஜபக்ஷாக்கள் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை.  சர்வதேசத்திடமிருந்து நாட்டை பல முறை பாதுகாத்துள்ளார்கள். நெருக்கடியான சூழ்நிலையிலும் நாட்டின் சுயாதீனத்தன்மை விட்டுக் கொடுக்கப்படவில்லை.

துறைமுக நகரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கும். இவ்விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை முன்னனெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போலியான செய்திகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக  செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40