(எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் கூட்டம் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன்போது எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள ஏப்ரல் மாதத்தின் இறுதி பாராளுமன்ற வாரத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணைகள் மற்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்ற சட்ட மூலங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக தேடிப்பார்க்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான யோசனைகள் எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவும் அதுதொடர்பான விவாதம் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்தவும் இதற்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இதுதொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM