(செ.தேன்மொழி)
வெலிமட பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். வெலிமட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது, ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றதகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது, உயிரிழந்த நபருக்கும், சந்தேக நபருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் இது மோதலாக மாறியுள்ளது. இதன்போது சந்தேக நபர் உயிரிழந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்துள்ள வெலிமட பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM