தந்தையின் கழுத்தை இறுக்கி கொலைசெய்த மகன் : கள்ளக்காதலனின் தாக்குதலில் பெண் பலி - நாட்டில் 3 கொலைகள் பதிவு

Published By: Digital Desk 2

14 Apr, 2021 | 03:56 PM
image

நாட்டின் மூன்று வேறுபட்ட பகுதிகளில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்தில் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதுடன்,இதன்போது பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நாட்டின் மூன்று வேறுபட்ட பகுதிகளான திஸ்ஸமஹாராம,பொத்துஹர மற்றும் இதோகம ஆகிய பகுதிகளில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரக்கல பகுதியில் மகனொருவர் அவரது தந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், 41 வயதுடைய சந்தேக நபரான மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திஸ்ஸமஹாராம சந்தகிரிகம பகுதியில் நபரொருவர் பெண்ணொருவரை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

சம்பவத்தில் 48 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபர் குறித்த பெண்ணின் கள்ள காதலர் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இதோகம பகுதியில் இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது , நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் சந்தேக நபரின் மனைவியிடம் கள்ள தொடர்புகளை பேணியுள்ளதாகவும், இதன்காரணமாகவே இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஊடகத்துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது! - பாரதி...

2025-02-13 14:04:22
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57
news-image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள்...

2025-02-13 12:54:13
news-image

காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும்...

2025-02-13 12:02:24
news-image

உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர்...

2025-02-13 12:52:28
news-image

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய...

2025-02-13 11:52:27
news-image

“இதுதான் நீங்கள் வழங்கும் நீதியா? தேசிய...

2025-02-13 11:04:31