நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர் 

Published By: Digital Desk 4

12 Apr, 2021 | 04:17 PM
image

கொவிட் 19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றிகொள்ள எமது கூட்டு முயற்சி காரணமாக அமைந்தது.

அதேபோன்று நாட்டின் நலனுக்காக நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன், ஒன்றுபட இந்நாளில் பிராத்திப்போம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ரஞ்சனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது - சஜித்தின் கோரிக்கைக்கு  சபாநாயகர் பதில் | Virakesari.lk

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சபாநாயகர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மலரவிருக்கும் புத்தாண்டு இலங்கையர்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்த கலாசார பண்டிகையாகும். இது நாம் கலாசாரம் மிக்க மனிதர்கள் என்ற ரீதியில் பல்லாயிரம் வருடங்களாக நமக்கிடையில் பேணிவரும் பிணைப்பிற்கான சான்றாகும்.

ஒவ்வொரு புத்தாண்டிலும் போன்று இவ்வருடமும் ஒரே நாடாக ஒரே தருணத்தில் முன்னெடுக்கும் சடங்குகள் நமது ஒற்றுமைக்கு ஒரு சான்றாகும். இந்த சடங்குகளை நிறைவேற்றும் எம் அனைவரினதும் ஒரே பிரார்த்தனை நிலைபேறான சுபீட்சமாகும். இதனை வெறும் பிரார்த்தனையாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் புத்தாண்டின் பின்னரும் நாம் அனைவரும் நாட்டுக்காக உழைக்க திடசங்கல்பம் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள், விரக்திகள் இலகுவில் மறக்கமுடியாதவை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

எனினும், கொவிட் 19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றிகொள்ள எமது கூட்டு முயற்சி காரணமாக அமைந்தது. அவ்வாறான உலகளாவிய பிரச்சினை மூலம் ஒற்றுமை மற்றும் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்வதன் பெறுமதி மனித குலத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது என்பதே எமது கருத்தாகும். இந்த சூழலும் புத்தாண்டுடன் வசந்தகாலமாக மாறும். அதனால்,

ஏனையவர்களை அனுதாபத்துடன் சிந்திக்கும் ஒரு புதிய மனிதராக இந்தப் புத்தாண்டில் நாட்டின் நலனுக்காக நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன், ஒன்றுபட வேண்டும் என்பதே எனது புத்தாண்டின் பிரார்த்தனையாகும்.

இலங்கையர்களாகிய நாங்கள் அனைவரும் சுபீட்சமான எதிர்காலத்தை அடைய இனிய சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40