தலையீட்டைக் கோரும் தலைமைகள்

Published By: Digital Desk 2

12 Apr, 2021 | 02:47 PM
image

“போர்வீரர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதில் இருந்தும், ராஜபக்ஷவினரை மின்சாரக் கதிரையில் இருந்தும்  காப்பாற்றியதாக உரிமை கோருபவர்கள், சர்வதேச  மனித உரிமை சட்டங்களைப் பற்றிப் போதிக்கின்ற தகைமையைக் கொண்டவர்களாக இருக்க முடியுமா?”

தனக்குத் தனக்கு என்றால் சுளகுபடக்குப் படக்கு என்று அடித்துக் கொள்ளுமாம், அதுபோலத் தான் இலங்கையின்அரசியல்வாதிகளும், நடந்து கொள்கிறார்கள்.

அண்மையில் முன்னாள் வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளிப்படுத்திய கருத்துக்களும், ஐக்கியதேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதமும் இதனைத் தான் உறுதிப்படுத்துவனவாக உள்ளன.

யுனெஸ்கோவின் தேசிய கலாசார மற்றும் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்பட்ட சிங்கராஜ வனத்தைப் பாதுகாப்பதற்கு ஐ.நாவைத் தலையீடு செய்யுமாறு கோரி, ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குட்டரஸுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் ருவன் விஜேவர்த்தன.

இலங்கையில் இன்று காடுகள்அழிக்கப்படுவது மிக முக்கியமான அரசியல் பிரச்சினையாக மாறியிருக்கிறது.குறிப்பாக சிங்கராஜவனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதுடன், காடுகளைஅழிப்பதில் அரசாங்கத்துக்கு இருக்கும் தொடர்புகளை முன்னிறுத்தி போராட்டங்களையும்முன்னெடுக்கின்றன.

காடழிப்பில் அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி தயாராக இல்லை. அவர் அண்மையில்  போகஸ்வெவவுக்குச் சென்றிருந்த போது தமது அரசாங்கத்தின் மீது,காடழிப்பு தொடர்பாக வீண்பழி சுமத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வாறான நிலையில் தான், சிங்கராஜவனத்தை பாதுகாக்க ஐ.நா. தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ருவன்விஜேவர்த்தனவினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-11#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43