(இராஜதுரை ஹஷான்)
முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும் புகையிரத தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில தொழிற்சங்கத்தினரது பின்னணியில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு காணப்படுகிறது.
குறுகிய நோக்கத்திற்காக பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுளை புகையிரத தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
புகையிரத சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வாக்குறுதிகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.
தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் பல்வேறு மட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புகையிரத சேவையில் காணப்படும் தொழில் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக்க நேரிடும்.
புகையிரத சாரதிகள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டு சங்கம் ஆகிய தொழிற்சங்கத்தினர் கடந்த சனிக்கிழமை முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM