பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 

Published By: Digital Desk 4

11 Apr, 2021 | 08:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு  பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒரு முறை மாத்திரம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை வழங்க  விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி, கிராம சேவகர், பிரதேச செயலகம் ஊடாக இக்கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தரப்பினர் பெற்றுக் கொள்ளும் மாத கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக  ஒரு முறை மாத்திரம் 5  ஆயிரம் ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சமுர்த்தி பயனாளர்கள், குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையவர்கள் உள்ள குடும்பம், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் உள்ள குடும்பங்கள், 100 வயதை பூர்த்தி செய்த முதியோர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்கள், மேன்முறையீடு செய்ய  தகுதி பெற்றுள்ள குடும்பங்கள் ஆகிய தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு முறை மாத்திரம் 5000 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இக்கொடுப்பனவு வழங்கப்படும். கொடுப்பனவுகளை பெற தகுதியுடையவர்கள் உரிய அதிகாரிகளுடன் தொடர்புக் கொண்டு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள  முடியும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை  முழமையாக கடைப்பிடிப்பது  அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக...

2025-05-23 13:35:13
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-05-23 13:00:45
news-image

இலங்கையில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான...

2025-05-23 12:51:21
news-image

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள்...

2025-05-23 12:38:08
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

2025-05-23 12:30:09
news-image

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்...

2025-05-23 12:39:03
news-image

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பான விசாரணைக்...

2025-05-23 12:20:55
news-image

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர்...

2025-05-23 11:36:29
news-image

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த 18 மில்லியன்...

2025-05-23 11:35:11
news-image

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர்...

2025-05-23 11:32:16
news-image

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்...

2025-05-23 11:28:22
news-image

நுவரெலியாவில் வாகனங்கள் தீவிர பரிசோதனை !

2025-05-23 11:54:35