இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது - விமல் 

Published By: Digital Desk 4

11 Apr, 2021 | 05:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 நாட்டின ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.

அரசாங்கத்தின் இலக்கை திசைத்திருப்ப பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன. என கைத்தொழில்  அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை விற்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்பித்தால், அதற்கெதிராக  தீர்மானம் எடுக்கப்படும்: விமல் வீரவன்ச | Virakesari.lk

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்சியதிகாரததை கைப்பற்றி குறுகிய காலத்தில் அரசாங்கம் பல சவால்களை எதிர்க் கொண்டுள்ளது.இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்ட சவால்களை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக் கொண்டுள்ளது.நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம்  அரச ஆதரவுடன் எழுச்சிப்பெற்றது.

ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவததினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது. ஜெனிவா விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதை அரசாங்கத்தின் சூழ்ச்சி என எதிர்தரப்பினர் குறிப்பிட்டுக் கொண்டு பராளுமன்றில் முறையற்ற வகையில் செயற்பட்டார்கள்.  வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரி வு செய்யப்பட்டதும் எதிர்க்கட்சியினர் அமைதியடைந்து விட்டார்கள்.

அரசாங்கத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறை  செல்லவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே அவர் சிறை சென்றுள்ளார் என்பதை எதிர் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும். ரஞ்சன் ராமநாயக்கவின் விவகாரத்துக்கு அரசியல் ரீதியில் இனியொருபோதும் தீர்வு காண முடியாது.

நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. பலவீனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி முறைமையின்அம்சங்களை பாதுகாக்க  அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 22:07:01
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13
news-image

குருணாகலில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10...

2025-03-24 20:05:45
news-image

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட...

2025-03-24 19:10:07