யாழ். மாவட்டத்தில் இயங்கும் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக திரையரங்குகளில் பொதுமக்கள் அதிகளவில ஒன்றுகூடல் சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக குறித்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதி கண்காணிப்பு வலயத்திலிருந்து நாளை திங்கட்கிழமை காலை 6 மணி முதல் விலக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் .
திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் 14 நாட்களாக கண்காணிப்பு வலயமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .
அந்த கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் பாரதிபுரம் பகுதியில் 88 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது .
அதனால் பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி நாளை திங்கட்கிழமை காலை 6 மணி தொடக்கம் கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் கூறினார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM