நீரில் மூழ்கி காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Published By: Vishnu

10 Apr, 2021 | 08:27 AM
image

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்ட இத்திக் குளத்தில் நீரில் மூழ்கி காணாமல்போன நபர் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேச வாசிகளுடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்த சுமார் 15 மணிநேர போராட்டத்தின் பின்னரே உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடிநிலம் பகுதியில் வசிக்கும் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து மேகநாதன் (வயது 62) என்பவேரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று காலை 9.30 மணியளவில் குறித்த நபர் மண்டானை, இத்திக் குளத்தில் நீராடுவதற்காக இறங்கியுள்ளார். இதன்போதே அவர் நீரில் மூழ்கி காணால்போயுள்ளார்.

அதன் பின்னர் குளக்கரையில் அவரது உடைகள் மற்றும் பாதணி என்பனவும் மீட்கப்பட்டுள்ளதுடன், பிரதேச வாசிகளினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பிரேதச வாசிகளுடன் இணைந்து காணாமல்போன நபரை கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

அது மாத்திரமன்றி மீட்பு நடவடிக்கைக்காக கடற்படையினரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்தபோதும், குளத்தின் ஆழமற்ற தன்மை மற்றும் முதலைகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர்களால் தங்களது சேவைகளை வழங்க இயலாது போயுள்ளது.

தொடர்ந்தும் திருக்கோவில் பிரதேச சபை அதிகாரிகள், பிரதேச வாசிகள் மற்றும் மீன்பிடி தோணி என்பவற்றின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக இன்று அதிகாலை 12.45 மணியளவில் காணாமல்போன நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந் நிலையில் அவரது உடல் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக மரண விசாரணை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப தகவல்களின் படி குறிந்த நபர் குளத்தில் உள்ள முதலையின் பிடியில் சிக்குண்டு காணாமல்போனதாக கூறப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய தகவல்கள் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30