24 மணித்தியாலத்தில் 13 பேர் பலி

Published By: Gayathri

09 Apr, 2021 | 01:17 PM
image

(செ.தேன்மொழி)

வாகன விபத்துகளினால் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பண்டிகை காலத்திற்கு இன்னமும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் வாகன விபத்துகள் மீண்டும் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் வாகன விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களுள் 7 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதுடன் , எஞ்சிய ஆறு பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்தவர்களாவர்.

இதன்போது , 6 பாதசாரதிகளும் , 4 மோட்டார் சைக்கிள் பயணிகளும் , 2 சாரதிகளும் மற்றும் பயணி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காலப்பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் அனைவரும் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் வீதிகளை பயன்படுத்தும் போது வீதி சட்டவிதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்நிலையில் விபத்துகளை தடுப்பதற்காக பொலிஸார் பல்வேறு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய பொது பொக்குவாரத்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பில் இன்று முதல் சிவில் உடையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். இதற்கு வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08