வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முதியவர் திடீர் மரணம்

Published By: Digital Desk 4

07 Apr, 2021 | 04:04 PM
image

வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முதியவர் ஒருவர், கீழே விழுந்த நிலையில் உயிரிழந்த  சம்பவமொன்று, இன்று பசறை கோணக்கலை பெருந்தோட்டத்தின் ரேந்தபொல பிரிவில்  இடம்பெற்றுள்ளது.

ரேந்தபொல பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த எஸ். இராமச்சந்திரன் என்ற 65 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று காலை தனது வீட்டுத் தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்தார். அந்நிலையில், அவர் கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, அவரது மனைவி தனது கணவருக்கு தேநீர் கொண்டு சென்ற வேளையில், அவர் கீழே விழுந்திருப்பதைக் கண்டு, அவரைத் தூக்க முயற்சித்த வேளையில், அவர் இறந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதையடுத்து  குறித்த சம்பவம் பசறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிசாரும் அங்கு வந்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன. மாரடைப்பு இம் மரணத்திற்கு காரணமாக இருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22