உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நியாயத்தை அரசாங்கம் நிச்சயம் வழங்க வேண்டும் - ஹெக்டர் அப்புஹாமி

Published By: Digital Desk 3

06 Apr, 2021 | 05:05 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குரியதாகும். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கான நியாயத்தை தற்போதைய அரசாங்கம் நிச்சயம் வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்தது. ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. ஆணைக்குழுவிற்கு பரிந்துரைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலேயே தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. குற்ற விசாரணைப் பிரிவு , பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்டவையால் மாத்திரமே சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

எனினும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்குரியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதே பேராயரதும் கோரிக்கையாகும். முழு நாட்டு மக்களும் இதே கோரிக்கையையே முன்வைக்கின்றனர். இதனை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19
news-image

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால்...

2023-12-11 15:46:41