வவுனியா குருமன்காடு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சாரதியை பொலிஸார் இன்னும் கைதுசெய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நான்காம் திகதி இரவு குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முற்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய நீல நிற முற்சக்கரவண்டியின் சாரதி குறித்த இடத்தில் நிற்காமல் விபத்தை ஏற்படுத்தியதும் அங்கிருந்து தப்பித்து சென்றதாக காயமடைந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் இரு தினங்கள் கடந்தும் விபத்தை ஏற்ப்படுத்திய நபரை கைது செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியின் (NP QU - 9554) இலக்கமும் பொலிசாருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM