நமது அரசியல் நிருபர்
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக இணைந்து பயணிப்பதற்கான சாத்தியம் அதிகரித்திருக்கின்றது.
முக்கியமாக இரண்டு தரப்பினரும் இணைந்து பயணிப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் விருப்பத்துடன் இருப்பதாகவும் அதற்கான பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளதாகவும் எனினும் எந்த முறையில் இணைந்து கொள்வது என்பது தொடர்பான ஒரு பொறிமுறையை உருவாக்க முடியாமையே தாமதத்துக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிப்பது மூலமே வெற்றியை ருசிக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றனர்.
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிப்பதே சமயோசிதமாக அமையும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே இணைந்து பயணிக்கவேண் டும் என்பதே இரண்டு தரப்பினரதும் பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர் பார்ப்பாக இருக்கின்றது. ஆனால் எந்த முறையில் எவ்வாறு இணைந்து கொள் வது என்பது தொடர்பான ஒரு சிக்கல் தொடர்ந்து நிலவி வருவதை காணமுடிகிறது.
கடுமையான விரக்தியில் 16 பேர் கொண்ட குழு
கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டபோது சுதந்திரக் கட்சியில் இருந்த 16 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கியதுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்து கொண்டனர். அப்போது 54 உறுப்பினர்களாக இருந்த கூட்டு எதிரணியின் எண்ணிக்கை 69 ஆக மாற்றமடைந்தது.
தற்போது ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள போதிலும்கூட இந்த 16 பேர் குழுவில் ஒருவரை தவிர எவருக்கும் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அதில் ஒருவரான சுசில் பிரேமஜயந்தவுக்கு மட்டும் ஒரு ராஜாங்க அமைச்சு பதவி கிடைத்து இருக்கிறது. அதுவும் விஜயதாச ராஜபக் ஷ ராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்ததன் காரணமாக அந்த பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தரப்பினர் பாரிய விரக்தியில் இருக்கின்றனர்.
அவர்கள் அரசாங்கம் தற்போது மக்க ளின் நம்பிக்கையை இழந்து வருவதாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள 16 பேர் குழுவில் ஒருவர் “நாம் இந்த அரசாங்கத்தை மிகவும் நம்பிக்கையுடன் உருவாக்கினோம். ஜனாதிபதி அதிகாரத்தை பெற உழைத்தோம்.
எமக்கு பொறுப்புகள் வழங்காமை கவலையளிக்கிறது. இன்று எம் மீது கட்சியின் தலைமைத்துவம் நம்பிக்கை வைக்காத நிலைமை காணப்படுகிறது. ஆனால் நாம் அரசாங்கத்திற்காக மக்களுக்காக செயற்படு வோம். மக்களின் எம் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் தயக்கம்
எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் அதிகமாக காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பதில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கின்றனர். அதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
அதனை கொள்கை அளவில் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுள்ளார். எனினும் உடனடியாக தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் செல்வதில் ரணில் விக்கிரமசிங்க தயக்கம் காட்டி வருகின்றார். அதுமட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்கவின் தேவை பாராளுமன்றத்திற்கு அதிக அளவில் உணரப்பட்ட பின்னரே தான் பாராளுமன்றம் செல்வேன் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பல்வேறு சவால்கள் நாட்டில் காணப்படுகின்ற நிலையில் எதிர்க்கட்சி அதனை எவ்வாறு பாராளுமன்றத்தில் சமாளிக்கப் போகிறது என்பதை ரணில் விக்கிரமசிங்க பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தேவையான முக்கியமான கட்டத்தில் தான் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் தரப்பின் மூலம் தெரியவருகின்றது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-30
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM