நூற்றுக்கணக்கான மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஆரம்ப கட்ட தகவல்களை வெளியிடும் அமைப்பொன்றினால் இணையத்தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளன.
வெளிப்படுத்தப்பட்ட தரவுகளில் 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கும்.
இதில் அமெரிக்காவில் 32 மில்லியன் பயனர்கள், இங்கிலாந்தில் 11 மில்லியன் பயனர்கள் மற்றும் இந்தியாவில் 6 மில்லியன் பயனர்கள் ஆகியோரின் தரவுகளும் அடங்கும்.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் பயனாளர்கள் நேரடியாக பட்டியலிடப்படவில்லை. எனினும் ஏனைய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களின் மில்லியன் கணக்கானவர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிப்படுத்தப்பட்ட தரவு தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த திகதிகள், சுயவிவர வாழ்க்கை வரலாறுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அவர்களில் மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவையும் உள்ளன.
பேஸ்புக்கின் தகவல் தொடர்பு இயக்குனர் லிஸ் ஷெப்பர்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரவு திருடப்பட்டதாகக் கூறினார், மேலும் நிறுவனம் இந்த சிக்கலைக் கண்டுபிடித்து சரி செய்தது.
ஆனால் சனிக்கிழமையன்று வெளிப்படுத்தப்பட்ட தரவுகளை கண்டறிந்த சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனமான ஹட்சன் ராக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அலோன் கால், பிசினஸ் இன்சைடரிடம் தகவல் திருட்டு அல்லது ஃபிஷிங் மோசடிகளுக்கு இணையத்தள மோசடி செய்பவர்களால் பயன்படுத்தப்படலாம் என்று கூறினார்.
பேஸ்புக் மற்றும் அதன் சமூக ஊடக தளங்கள் மற்றும் பயன்பாடுகளின் மீதான பயனாளர்களின் நம்பிக்கை ஏற்கனவே குறைவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM