அர்த்தமற்ற முறையில் தமிழ்ப் பிரதேசத்தில் புத்தர் சிலைகளை அமைத்து வருவது நாட்டில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்கான ஒரு பாரிய சதி முயற்சியே . இதனை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்நாடு மீண்டும் ஓர் பாரிய அழிவையே சந்திக்கும் என்றே கருதுகின்றோம் என யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை வெ ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் உருவான அமைதிச் சூழ்நிலையை குழப்பியடித்த பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கவேண்டிவரும். இலங்கைத் தீவில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டுமானால் மத சுதந்திரத்தின் தனித்துவத்திற்கு மதிப்பளித்து நடக்கவேண்டும்.
தமிழ்ப் பிரதேசத்தில் ஒருவித காரணமும் இன்றிப் புத்தர் சிலைகளை அமைத்துவருவது தமிழ்மக்களுக்கு சினமூட்டும் நடவடிக்கை என்பதை தெளிவுபடுத்துகின்றோம். இந்த நடவடிக்கையில் உள்ள பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்பதை அரசு கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த புத்திமதி கூறவேண்டும்.
எமது பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின்போது அழிக்கப்பட்ட ஆலயங்களைப் புனரமைக்க கோடிக்கணக்கான பணத்தை மக்களே செலவிட்டுள்ளனர். கண்துடைப்பிற்காக சில இலட்சம் ரூபாய்களை அரசு வழங்கியிருந்தது. அவை அழிவடைந்த ஆலயங்களை புனரமைக்க போதுமானதாக காணப்படவில்லை.
இந்நிலையில் அர்த்தமற்ற முறையில் தமிழ்ப் பிரதேசத்தில் புத்தர் சிலைகளை அமைத்து வருவது நாட்டில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்கான ஒரு பாரிய சதி முயற்சியேயாகும். எனவே இதனை அரசு உடனடியாக நிறுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM