உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

04 Apr, 2021 | 06:15 AM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 அத்தோடு இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

2019 இல் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூருதலுடன் இவ்வாண்டு உயிர்த்த ஞாயிறு கொண்டாடப்படுகிறது. 

அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு பிரிவினர் இது தொடர்பில் மிகுந்த அவதானிப்புடன் இருப்பதோடு , இலங்கை பொலிஸாருடன் இணைந்து முப்படையினரும் சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்புச்சபை அதிகாரிகள் மற்றும் முப்படையினருக்கு விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த காலப்பகுதியில் மிகுந்த அவதானத்துடன் கடமையில் ஈடுபடுமாறும் , பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் ஸ்திரப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படைவாதம் , வன்முறைகள் அல்லது பயங்கரவாதம் என்பவை தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் அவதானத்துடன் இருக்குமாறும் , இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் தெரியவரும் பட்சத்தில் அவை தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்குமாறும் சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். 

இதே வேளை வழிபாடுகளில் ஈடுபடும் போது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08