(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
2019 இல் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூருதலுடன் இவ்வாண்டு உயிர்த்த ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு பிரிவினர் இது தொடர்பில் மிகுந்த அவதானிப்புடன் இருப்பதோடு , இலங்கை பொலிஸாருடன் இணைந்து முப்படையினரும் சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்புச்சபை அதிகாரிகள் மற்றும் முப்படையினருக்கு விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் மிகுந்த அவதானத்துடன் கடமையில் ஈடுபடுமாறும் , பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் ஸ்திரப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படைவாதம் , வன்முறைகள் அல்லது பயங்கரவாதம் என்பவை தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் அவதானத்துடன் இருக்குமாறும் , இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் தெரியவரும் பட்சத்தில் அவை தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்குமாறும் சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
இதே வேளை வழிபாடுகளில் ஈடுபடும் போது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM