வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் இன்றைய இறுதி ரந்தோலி பெரஹரா ஊர்வலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிடுவார்.
எசல பெரஹரா கடந்த மூன்றாம் திகதி அதிகாலை கண்டி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீநாத, ஸ்ரீ பத்தினி ஆகிய நான்கு தேவாலயங்களிலும் இடம்பெற்ற காப்புக் கட்டுதலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து 28 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை கும்பல் பெரஹரா ஊர்வலம் நடைபெற்றது.
13 ஆம் திகதி ஆரம்பமான ரந்தோலி பெரஹரா ஊர்வலம் இன்றிரவுடன் நிறைவடைகின்றது. இதன் பொருட்டு இன்று மாலை கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து ஆலயத்தின் பிரதம ரஷ்டி கோ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டிவாழ் இந்து பிரமுகர்கள், வர்த்தகர்கள், பிரதிநிதிகள் என பலரும் நந்தி ஏந்தியவாறு மேள, தாள வாத்தியங்களுடன் தலதா வீதி வழியாக ஊர்வலமாக தலதா மாளிகைக்குச் செல்வார்கள். அங்கு இவர்களை தியவதன நிலமே வரவேற்பார்.
பின்னர் இந்து பிரமுகர்கள் தியவதன நிலமேக்கு சந்தன மாலை அணிவித்து திலகமிட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார்கள்.
அதன் பின்னர் அங்கு இந்து சமய விசேட பூஜைகளை நடத்துவார்கள். இன்று இரவு இறுதி ரந்தோலி பெரஹரா ஊர்வலம் நிறைவடைந்த பின்னர் நாளை வியாழக்கிழமை அதிகாலை கெட்டம்பே மகாவலி நதியில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.
தீர்த்தோற்சவத்தின்போது சேகரிக்கப்பட்ட நீர் கலசங்கள் எடுத்துவரப்பட்டு கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெறும்.
பின்னர் பகல் 12.00 மணியளவில் தியவதன நிலமே மற்றும் பஸநாயக்க நிலமேக்கள் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததும் பகல் பெரஹரா ஊர்வலம் அங்கிருந்து ஆரம்பமாகி மணிக்கூட்டு வீதி, தலதா வீதி, கொட்டுகொடல்ல வீதி, கந்தே வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி வழியாக வந்து இராஜ வீதி வழியாக ஸ்ரீ தலதா மாளிகையை சென்றடைந்ததும் கண்டி எசல பெரஹரா நிறைவடையும்.
அதன் பின்னர் தியவதன நிலமே தலைமையில் பஸநாயக்க நிலமேக்கள் பெரஹரா ஊர்வலங்களில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்கள் ஊர்வலமாகச் சென்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து எஸல பெரஹரா நிறைவடைந்த செய்தியை அறிவிப்பார் கள்.
இதனையடுத்து ஜனாதிபதி கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி பணப்பரிசு மற் றும் விருதுகள், சான்றிதழ்களை வழங்கி கௌரவித்து தேநீர் விருந்துபசாரமும் வழங் கிக் கௌரவிப்பார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM