பதுளை பசறையில் கடந்த 20 ஆம் திகதி விபத்துக்குள்ளான பஸ்ஸை செலுத்திய சாரதி குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதாக, பசறைப் பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சாரதி, பஸ் அட்டவணையை பின்பற்றாத நிலையில் செயல்பட்டமை,பொறுப்பற்ற நிலையில் பஸ்ஸை கடும் வேகத்தில் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியிருந்தார்.
இதன்போது அந்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், மேலுமொரு மோசடி குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.
குறித்த பஸ் சாரதி, பிறிதொரு சாரதியின் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தியே, விபத்துக்குள்ளான பஸ்ஸை செலுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
அத்துடன், அவர் பிறிதொருவரின் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, நீண்ட காலமாக சாரதியாக செயல்பட்டு வந்தமை குறித்த தகவல்களும், வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வருகின்றன. அத்துடன் குறித்த சாரதிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை, முன்னெடுக்கவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேற்படி பசறை விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM