இலங்கையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு உயிராவது பாதுகாப்பற்ற தொடரூந்துக் கடவையில் பலி எடுக்கப்படுகிறது.
பொலிஸ் திணைக்களம் வீதி வாகன விபத்து அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தொடரூந்து விபத்து மரணங்களுக்கு புகையிரத திணைக்களமே பொறுப்பு என்று கைவிரித்து விடுகிறது.
ஒவ்வொரு உயிரிழப்பு ஏற்படும் போதும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் பரிமாறப்படுவதை தவிர எந்த உருப்படியான நடவடிக்கையோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமோ வழங்கப்படுவதில்லை.
காவலாளிகளை நிறுத்துவதை விட தன்னியக்க பொறிமுறைகளை பயன்படுத்துவது உயிர் பாதுகாப்புக்கு உயர்வானது என ஆய்வுகள் காட்டுகின்றன.
எனவே காவலாளிகளை குற்றம்சாட்டுவதை விடுத்து தன்னியக்க பொறிமுறைகளைக் கொண்ட பாதுகாப்பு கடவைகளை நிர்மாணிப்பதற்கு புகையிரத திணைக்களம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதுவரைக்கும் பாதுகாப்பற்ற கடவைகளில் ஏற்ப்படும் உயிரிழப்புகளுக்கும் ஏனைய சேதங்களுக்கும் ஏனைய நாடுகளைப் போல் பொறுப்புகூறுவதுடன் உரிய இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்க புகையிரத திணைக்களம் முன்வரவேண்டும்.
தவறினால் வெகுஜன அமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளும் நியாயத்தையும் பொறுப்புகூறலையும் நிலைநாட்டுவதற்கு உரிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.
தன்னியக்க கடவைகள் நிர்மாணிக்கப்படும் வரை தொடரூந்து பாதையை ஊடறுக்கும் பாதையின் இருபுறமும் 5-7 மீற்றர் தூரத்தில் வேகத்தடுப்பான்பிட்டிகள் ( Speed Breaker Humps )நிர்மாணிக்கப்படுவதும் புகையிரதப்பாதை தொடர்பான எச்சரிக்கைப்பலகைகள் நிறுவப்படுவதுடன் அந்தப் பலகைகளில் விபத்து ஏற்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தால் வாகனச் சாரதிகளின் அவதானத்தை தூண்டுவதுடன் விபத்துக்களை குறைக்கவும் விபத்துஏற்பட்ட நிலையில் அதனால் உருவாகும் பாதிப்புகளையும் குறைக்க முடியும்.
அதேவேளை பாதுகாப்பற்ற கடவைகளை அண்மிக்கும் போது தொடரூந்தின் எச்சரிக்கை ஒலியை எழுப்புமாறு தொடரூந்து சாரதிகள் பணிக்கப்படவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM