இந்தோனேசியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் : ஒருவர் பலி, பலர் காயம் !

28 Mar, 2021 | 02:06 PM
image

இந்தோனேசியாவின் மக்காசர் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

உலகளாவிய கிறிஸ்தவர்கள் இன்றையதினம் குருத்தோலை ஞாயிறு தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவின்  சுலவேசி தீவில் உள்ள மக்காசர் பகுதியில் உள்ள பெரிய கோவிலில் குருத்தோலை ஞாயிறுதின ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகம் தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டதாகவும் ஆலயத்தின் பிரதான வாயில் அருகே குண்டு வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாம் ஆராதனைகளை நிறைவுசெய்த நிலையில், மக்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்றுகொண்டிருக்கையிலேயே குறித்த தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றதாக தேவலயத்தின் பங்குத் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17