பாடசாலை வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானம்

Published By: Digital Desk 4

26 Mar, 2021 | 04:25 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

மேல் மாகாண பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் பாசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு ! | Virakesari.lk

வகுப்பொன்றில் ஆகக் கூடுதலாக 15 மாணவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வகுப்பொன்றில் 30 மாணவர்கள் காணப்பட்டால், அவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து நாளொன்றுக்கு 15 பேரை மாத்திரம் வகுப்பில் இருக்கச் செய்ய முடியும். மேலும், வகுப்பில் 45 மாணவர்கள் காணப்பட்டால், அவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து வகுப்புக்களை நடத்த வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு வகுப்பில், ஒவ்வொரு நாளும் சங்கிலித் தொடராக 15 மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதலுடன், மாணவ சமுதாயத்தை மன உளைச்சலுக்கு உட்படாதவாறு அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நடத்தப்படுவதுடன், போட்டிகள் மற்றும் பரீட்சைகள் போன்ற எதையும் தற்போதைக்கு நடத்த வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50