(எம்.எம்.சில்வெஸ்டர்)
மேல் மாகாண பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் பாசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வகுப்பொன்றில் ஆகக் கூடுதலாக 15 மாணவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வகுப்பொன்றில் 30 மாணவர்கள் காணப்பட்டால், அவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து நாளொன்றுக்கு 15 பேரை மாத்திரம் வகுப்பில் இருக்கச் செய்ய முடியும். மேலும், வகுப்பில் 45 மாணவர்கள் காணப்பட்டால், அவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து வகுப்புக்களை நடத்த வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு வகுப்பில், ஒவ்வொரு நாளும் சங்கிலித் தொடராக 15 மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதலுடன், மாணவ சமுதாயத்தை மன உளைச்சலுக்கு உட்படாதவாறு அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நடத்தப்படுவதுடன், போட்டிகள் மற்றும் பரீட்சைகள் போன்ற எதையும் தற்போதைக்கு நடத்த வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM