தடயவியல் கணக்காய்வு செய்வதன் மூலமே சீனி இறக்குமதியினால் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை தெரிந்துகொள்ளலாம் - ஹர்ஷடி சில்வா

Published By: Digital Desk 3

24 Mar, 2021 | 11:40 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சீனி இறக்குமதியால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான நஷ்டத்தை கண்டறிய தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கியதாக அரசாங்கம் பொய் பிரசாரம் செய்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் கலாநிதி ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சின் கீழ் இருக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலே சீனிக்கான இறக்குமதி வரியை 50 ரூபாவில் இருந்து 49.75 ரூபாவரை குறைக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் 25 சதம் வரிக்கு சீனி இறக்குமதி செய்ததன் நன்மை மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது யாரும் அறிந்த விடயம். 

ஒரு கிலாே சீனி 85 ரூபாவுக்கு விற்கப்படவேண்டும் என ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தெரிவித்திருந்தார். அந்த வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் மக்களுக்கு சீனி பெற்றுக்காெள்ள முடிந்ததா என கேட்கின்றேன்.

பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பதும் குறைப்பதும் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றது. எமது அரசாங்க காலத்திலும் அவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. அது தவறு என தெரிவிக்கவில்லை. ஆனால் இங்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு என தெரிவித்து, அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய வருமானத்தை இல்லாமலாக்கி இருக்கின்றது. 

மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் சீனி இறக்குமதிக்கான செலவு ஒரு கிலோவுக்கு 80.75 ரூபாவாகும். ஆனால் சீனி இறக்குமதி 25 சதம் வரை வரி குறைப்பின் மூலம் கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை இறக்குமதி செலவு கிலாவொன்றுக்கு 77.27 ரூபாவாகும். ஆனால் இந்த காலப்பகுதியில் சதொச நிறுவனம் ஒரு கிலாே சீனி நூறு ரூபாவுக்கும் அதிகவிலைக்கு பெற்றுக்கொண்டுள்ளதாகவே அதிகமானவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் எத்தனை ரூபாவுக்கு பெற்றுக்கொண்டது என்பது யாருக்கும் தெரியாது.

அதனால்தான் சீனி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளது தெளிவாகின்றது. அதனால் ஏற்பட்டிருக்கும் உண்மையான நட்டத்தை தெரிந்து கொள்வதற்கு இதுதொடர்பாக தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அதன் மூலமே உண்மையை கண்டறியலாம். 

அதேபோன்று எரிபொருள் விலை கடந்த ஏப்ரல் மாதம் உலக சந்தையில் பாரியளவில் குறைவடைந்தது. ஆனால் மக்களுக்கு அதன் நன்மையை அரசாங்கம் வழங்கவில்லை. எரிபொருள் மானியம் வழங்கியதாக அரசாங்கம் பொய் கூறிவருகின்றது. எமது காலத்தில் இருந்த விலையே இன்றும் எரிபொருள் விற்பனையாகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...

2025-04-22 01:51:07
news-image

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...

2025-04-21 23:18:09
news-image

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

2025-04-21 23:10:54
news-image

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...

2025-04-21 19:57:04
news-image

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...

2025-04-21 22:15:04
news-image

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...

2025-04-21 15:48:26
news-image

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...

2025-04-21 19:54:29
news-image

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...

2025-04-21 20:07:44
news-image

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...

2025-04-21 19:48:28
news-image

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...

2025-04-21 19:44:36
news-image

திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட...

2025-04-21 20:11:44
news-image

கிழக்கில்  அதிக வெப்பம் ! -...

2025-04-21 20:01:33