குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை சிறப்பு விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குவைத்திலிருந்து ஜசீரா ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜே.என் -551 என்ற விமானத்னூடாக இன்று அதிகாலை 2.40 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
இவர்கள் குவைத்தின் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காகவே அந் நாட்டு பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்குட்படுத்தப்பட்டு, அவர்களிடமிருந்து அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந் நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்களை தனிமைப்படுத்தலுக்காக இலங்கை இராணுவத்தினர் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM